பல இளையோர் தங்களைத் தாங்களே ஆபத்தான கட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.  எப்படி? இவர்கள் குறிப்பாக 18 – 34 வயதிற்கு இடைப்பட்டவர்கள் தங்களது நிதி சம்பந்தமாக விபரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்மை தாமே கஸ்டங்களை ஏற்படுத்துகின்றனர். இந்தக் கூற்றானது சரியானது என ஏற்றும் கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையானது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்திருக்கின்றது. 45 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமது நிதி சம்பந்தமான செயற்பாடுகளை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்கின்றார்கள். அது மட்டுமல்ல தமது பின் இலக்கங்களைக் கூட இரகசியமாக வைப்பதில்லையெனத் தெரிகின்றது.

இந்தக் குறிப்பிட்ட வயதெல்லைக்குள் உள்ளவர்கள்  அதிகமானளவிற்கு  கணணியை தமது பரிமாற்றக் கருவியாகப் பாவிக்கின்றனர். இவ்வாறு கணணிமூலமாக நிதி சம்பந்தமான இரகசிய விடையங்களைப் பரிமாறிய பலர் ஏதாவது ஒரு வழியில் மோசடிக்கு ஆளான அனுபவத்தை அவர்கள் பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.

கிட்டத்தட்ட 43 சதவீதமான இளையோர் இவ்வாறான பழக்கத்தைக் கைக்கொள்வதாகத் தெரிகிறது. கனடிய வங்கிகளின் கூட்டமைப்பு 2011ம் ஆண்டில் 436.6 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றது.